×

திருமயத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகளுடன் தனிநபர் வாக்குவாதம்

திருமயம், மே 16: திருமயத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகளுடன் தனிநபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  திருமயத்தில் உள்ள பொன்னமராவதி விலக்கு சாலை அருகே இருந்த அரசு குடிநீர் கிணறு உட்பட சுற்றுப்புற இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை திருமயம் தாசில்தார் சுரேஸ் தலைமையில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதற்கு பிரச்னைக்குரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதன்பின்னர் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை கண்டறிந்து அளவீடு செய்து அளவை கல்லை அதிகாரிகள்  நட்டனர். பின்னர் திருமயம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட நபருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags : land ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...