புதுக்கோட்டை, மே 16: புதுக்கோட்டை பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளை, இந்த கொள்ளைக்கு காரணமாக இருந்த மாரிமுத்துவின் கொலை வழக்கில் இதுவரை போலீசார் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக இருந்த மாரிமுத்து, ஏப்ரல் 26ம் தேதி காணாமல் போன நிலையில், மணமேல்குடி கடற்கரைப் பகுதியில் 29ம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையே, வங்கியில் இருந்த 13.75 கிலோ தங்க நகைகளுடன் மாயமாகியுள்ளது என்று வங்கி மேலாளர் மாரீஸ் கண்ணன் அளித்தார். இந்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாரிமுத்து கொலைக்கும் வங்கி ஊழியர்ளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கூறும் அவரது உறவினர்கள், இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து விசாரணை செய்தும் கொலை, கொள்ளைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி 10 நாட்கள் மேலாகியும் இதுவரை கொலை வழக்கில் யார் தொடர்புடையவர்கள் என்று சிறு குழுவை கூட தெரியாமல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளை, கொலை வழக்கில் எப்போது குற்றவாழிகளை போலீசார் கைது செய்வார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.