×

மக்கள் நீதிமன்ற கட்சியைதடை செய்ய வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், மே 16: ஜெயங்கொண்டத்தில்  இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் கடந்த 12ம் தேதி அன்று  மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன்  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்  அப்போது இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சியை தடை செய்ய கோரியும் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதற்கு வன்மையாக கண்டித்தும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கமலஹாசன் முயற்சிக்கிறார். அதனால் மக்கள் நீதி மைய கட்சியினை தடைசெய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : courts ,court ,
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...