×

அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் ஜூலை 7ம் தேதி கடைசி

நாகை, மே16: நாகையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயில ஜூலை 7ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயில விரும்பும் தந்தை இறந்த, தாய் மட்டும் உள்ள குழந்தைகள், தாய் இறந்து தந்தை மட்டும் உள்ள குழந்தைகள், ஆயுள் கைதிகள் ஆகியோரின் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இக்காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம். மாணவி எனில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலும், மாணவர் என்றால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு  வரையிலும் இக்காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம். விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து விபரங்களையும் நாகை பால்பண்ணைச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆர்டிஓ அலுவலகம் பின்பு அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், சாமந்தான்பேட்டை, பால்பண்ணைச்சேரி நாகை என்ற முகவரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பத்துடன் தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 24 ஆயிரத்தற்குள் உள்ள சான்றிதளுடன்  வரும் 31.7.2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,children ,stay ,camp ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...