×

குளித்தலை தென்கரை வாய்க்கால் ஹைஸ்கூல் படிகட்டு துறை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

குளித்தலை, மே16:  குளித்தலை தென்கரைவாய்க்காலி–்ல் உள்ள ஹைஸ்கூல் படிகட்டுதுறையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.   கரூர் -திருச்சி மெயின்ரோட்டில் 11வது வார்டு குளித்தலை எம்.பி.எஸ்.அக்ரஹாரம், சக்தி விநாயகர் கோயில் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏராளமான ஆண்கள், பெண்கள் தென்கரை வாய்க்கால் ஹைஸ்கூல் படிகட்டு துறையில் குளிக்கின்றனர். ஆனால் இப்பகுதியில் முறையான படிகட்டுகள் இல்லாததால் மக்கள் குளிக்கவும், பலவிதமான பயன்பாட்டிற்கும் வசதியின்றி குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள்,முதியோர் ஆகியோர் குளிப்பதற்கு மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், தவறினாலும் தண்ணீரில் செல்லும் வேகத்திலும், சுழலிலும் சிக்கி உயிர்பலி ஏற்பட்டு இறக்க நேரிடும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி ஆற்றுப்பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் ஆடி மாதம் தென்கரை வாய்க்காலில் தண்ணீர் விடுவதற்குள் ஹைஸ்கூல் படிகட்டு துறையை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்