×

கரூர் மில்கேட் அருகே திறந்த நிலை கழிவுநீர் வடிகாலால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், மே 16: கரூர் மில்கேட் அருகேயுள்ள தனியார் மருத்துவமனை அருகே திறந்த நிலையில் சாக்கடை வடிகால் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர் மில்கேட் அருகே வஉசி தெருப் பகுதி உள்ளது. இந்த தெருவின் வழியாக தாந்தோணிமலை வடக்குத்தெரு, பெருமாள் கோயில் போன்ற பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையோரம் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இதில், குறிப்பிட்ட தூரம் வரை சாக்கடை வடிகால் திறந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் இந்த பகுதியின் வழியாக மணல் எடுத்துச் செல்லும் மாட்டு வண்டிகளாலும் ஒதுங்க முடியாமல் வாகன ஒட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமப்படுகின்றனர்.எனவே, இந்த பீதியை போக்கும் வகையில் திறந்த நிலையில் உள்ள சாக்கடை வடிகால்களை சிலாப் வைத்து மறைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Karur Milagate ,disaster ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...