×

மலைக்கோவிலூர் ஓட்டலில் மதுவிற்ற வாலிபர் கைது 67பாட்டில்கள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி

அரவக்குறிச்சி, மே 16:   அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில்ஓட்டலில் மது பாட்டில் களை வைத்து விற்பனை செய்தவரை கைது செய்து அவரிடமிருந்து 67 மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் இப்பகுதியில் உள்ளது.  தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோயிலூர் பகுதியில் புதுக்கோட்டை மாவட்டம் கோனேரி யேந்தல் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (29) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.  இங்கு மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது தகவலறிந்த தேர்தல் பறக்கும் படைஅலுவலர்    பரமேஸ்வரன் மற்றும் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.அப்போது கடையில் 58 மது பாட்டில் களும், 9 பீர் பாட்டில்களும் விற்பனைக்கு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதொடர்பாக அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கைப்பற்றிய மதுபாட்டில்களை ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கருப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : lady ,cottage shop ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...