×

குழாய் உடைந்து குடிநீர் வீண்

பொள்ளாச்சி, மே 15:    பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர், நகராட்சிக்குட்பட்ட ஜோதிநகர், வெங்கடேசாகாலனி, வடுகபாளையம், மகாலிங்கபுரம், டீச்சர்ஸ்காலனி, மரப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மேல்நிலை தொட்டிகளில் நிரப்பி, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, அந்தந்த வார்டு குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், மேல்நிலை தொட்டியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது அடிக்கடி நடக்கிறது.

இதில், பிஎஸ்என்எல் எதிரே உள்ள பாலக்காடுரோட்டின் ஒருபகுதி மற்றும் மார்க்கெட் ரோட்டிலும் 5 மாதங்களுக்கு  முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டது.
ஆனால், அந்த குழாயை முறையாக சீரமைக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் குடிநீர் திறக்கும்போது, குடிநீர் வெளியேறி வீணாவது தொடர்கிறது. நகராட்சி அதிகாரிகள் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் தண்ணீர் வீணானால்,  கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  எனவே,  நகரில் குடிநீர் குழாய் உடைப்பை முறையாக சரிசெய்து  குடிநீர் விரயமாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்