×

வீட்டில் நகை திருட்டு

கோவை, மே 15: கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள சரஸ்வதி நகரை சேர்ந்தவர் ேகாவிந்தராஜன் (45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியூர் சென்றார். நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை காணவில்லை. சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,home ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...