×

சூலூர் திருச்சி சாலை விரிவாக்கம் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்

சூலூர்,மே 15: சூலூர் திருச்சாலை விரிவாக்கம் தரமின்றி அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சூலூர் திருச்சி சாலை சிந்தாமணிப்புதூர் முதல் காங்கேயம் பாளையம் வரை அகலப்படுத்தும் பணி தற்போது நடக்கிறது. இதில் நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் போடப்பட்ட பாலங்களை அப்படியே விட்டுவிட்டு அதனை ஒட்டியே தொடர்ந்து பாலங்கள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாலங்களில்  கம்பி கட்டி காங்கிரீட் அமைப்பதற்கு பதிலாக தரமற்ற  சிமெண்ட குழாய்களைப் பதித்து அதன் மீது தார்சாலை அமைக்கின்றனர்.

இவ்வாறாக அமைக்கப்பட்ட சிமெண்ட் குழாய் மீது மண்ணைக் கொட்டி சாலை அமைக்கும்பணி நடந்து வருகிறது. தற்போது தார்சாலை அமைக்கும் முன்பாகவே  ரோடு ரோலர் ஓட்டும் போது  அங்கு பதிக்கப்பட்டுள்ள சிமெண்ட குழாய்  விரிசல் விட்டு உடைந்துள்ளது. இதை பொருட்படுத்தாமல் ஒப்பந்ததாரர் சாலை அமைத்து வருகிறார். டன்   கணக்கில் லோடு ஏற்றப்பட்ட லாரிகள் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags : Sulur ,road ,Trichy ,
× RELATED சூலூரில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து