×

வாலிபர் தற்கொலை

கம்பம், மே 15: கம்பத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கம்பம் நந்தனார் காலனியை சேர்ந்த சிவா மகன் விநோத்குமார் (21). இவர் வேடசந்தூரில் தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்தார். விநோத்குமாருக்கும் பெண் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த விநோத்குமார் நேற்று காலை கம்பம்-கூடலூர் சாலையில் தனியார் கல்யாண மண்டபத்திற்கு பின்புறம் புளியமரம் ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை