×

கார் மோதி முதியவர் பலி

தொண்டி, மே 15: ராமநாதபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி அருகே சம்பையில் டூவீலரில் இதே ஊரை சேர்ந்த சேர்ந்த ஆசிர்வாதம்(70) சென்றுள்ளார். அப்போது டூவீலர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆசிர்வாதம் சம்பவ இடத்திலேயே பலியானார். தப்பி ஓடிய கார் டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த எட்வின்தாஸ்(40) என்பவரை போலீசார் எஸ்.பி.பட்டினத்தில் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை