×

தோழி வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவி மாயம்

மதுரை, மே 15:  மதுரையில் மாயமான பள்ளி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை செல்லூர் கொன்னவாயன் சாலை, லதா சரவணன் காம்பவுண்டை சேர்ந்தவர் உதயகுமார் மகள் சுவாதி(15). ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். கடந்த 12ம் தேதி தோழி வீட்டுக்குச் செல்வதாக கூறிச் சென்ற சுவாதி, வீடு திரும்பவில்லை. வரது தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்துவிட்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை. செல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி வழக்குப்பதிவு செய்து, மாணவி சுவாதியை தேடி வருகின்றனர்.

Tags : home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...