×

மனைவிகளுடன் சண்டை கணவன்கள் தற்கொலை

மதுரை, மே 15:  மதுரையில் மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
 மதுரை எஸ்.ஆலங்குளம் சிஆர்ஓ காலனியை சேர்ந்தவர் வேல்முருகன்(28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. மேலும் மனைவி நாகஜோதியுடன் கருத்துவேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி(42). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும் மனைவி சுமதிக்கும் இவருக்கும் கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் விஷம் குடித்து கணேஷ்பாண்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Husbands ,suicide ,wives ,
× RELATED குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட்...