×

மாணவர் கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் சரண்

மதுரை, மே 15: கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மதுரை ஜே.எம். 4 கோர்ட்டில் நேற்று மேலும் ஒருவர் சரணடைந்தார். இவரையும் சேர்த்து இவ்வழக்கில் 2 பேர் இதுவரை சரணடைந்துள்ளனர்.  உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி என்ற பிளேடு பாண்டி. உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரை மதுரையில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகர் சுடுகாடு அருகில் கடந்த வாரம் ஒரு கும்பல் கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்
.
இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா பாலூத்து மேற்குத்தெருவை  சேர்ந்த காளியப்பன் மகன் அலெக்ஸ் (25) இவ்வழக்கு தொடர்பாக மதுரை ேஜ.எம்.4 கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இவரை 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் கவுதமன் உத்தரவிட்டார். இதனையடுத்து அலெக்ஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இவ்வழக்கு தொடர்பாக கொண்டையம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகன் அஜித் (23) நேற்று முன்தினம் மதுரை ேஜ.எம்.4 கோர்ட்டில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது. இவரையும் சேர்த்து, பாண்டி கொலை வழக்கில் இதுவரை 2 பேர் சரணடைந்துள்ளனர்.

Tags :
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...