×

உசிலையில் கஞ்சா விற்ற ஆந்திராகாரர்கள் கைது

உசிலம்பட்டி, மே 15: உசிலம்பட்டி 4 கிலோ கஞ்சாவுடன் 2 ஆந்திர மாநிலத்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்றிருந்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த உசிலம்பட்டி நகர் போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்களிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ரூ.2250 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் பெரிய சாரளா கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (70), இதே மாநிலம் விஜயவாடா மாவட்டம் சிட்டி நகர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் மனைவி லெட்சுமி (35), உசிலம்பட்டி சன்னாசி செட்டியார்தெருவை சேர்ந்த  காசிராஜா மனைவி நதியா (40), கணவாய்பட்டியை சேர்ந்த தங்கமலை மகன் பாலகிருஷ்ணன் (38) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Anjali ,
× RELATED கர்நாடக போலீஸ் அதிகாரி உட்பட 3 பேரின்...