×

தென்காசியில் பறை அரங்கேற்ற விழா

தென்காசி, மே 15:   தென்காசியில் பறை பயிற்சிபெற்ற 13வது வார்டு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைன் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் அரங்கேற்ற விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கற்பகம் வரவேற்றார். இதில் பறை பயிற்சிபெற்ற ஏராளமான மாணவர்கள் தங்களது கலைத்திறமையை அரங்கேற்றி வெளிப்படுத்தினர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  வழங்கப்பட்டது.  ஆசிரியர் வின்சென்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் தமிழ்செல்வி, மாலையம்மாள், பைன் ஆர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் முருகன், உறுப்பினர்கள் சுதாகர், ராம்ராஜ், மாரிமுத்து, முகம்மது ரஷீத், விவேக், தட்சிணாமூர்த்தி, அந்தோணி, எபனேசர் செய்திருந்தனர்.


Tags : ceremony ,Tenkasi ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா