×

அரசு பஸ் கன்டக்டர் மர்ம மரணம்

சென்ைன, மே 15: கோயம்பேடு பணிமனையில் அரசு பஸ் கன்டக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை புதுப்பேட்டை தெற்கு கூவம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (44). கோயம்பேடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ் கன்டக்டராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் பணிக்கு வந்த இவர், பணிமனையில் உள்ள அறைக்கு சென்றபோது, திடீரென வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.சக ஊழியர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வந்தவர்கள், கோபியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார், கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்கு பதிவு செய்து, கோபி எதனால் இறந்தார் என விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...