×

கல்லூரி வளாகத்தில் புகுந்து பேராசிரியர் பைக்கை திருடிய இருவர் கைது

செங்கல்பட்டு, மே15: செங்கல்பட்டு பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், வழக்கம்போல கல்லூரிக்கு சென்ற அரவிந்தன் தனது பைக்கை கல்லூரி வளாகத்தில் நிறுத்தினார். பின்னர் வகுப்புக்கு சென்றுவிட்டார். மாலையில் வகுப்பு முடிந்ததும் பைக்கை எடுக்க வந்தபோது மாயமாகி இருந்தது. கல்லூரி வளாகம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் நேற்று காட்டாங்கொளத்தூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்தனர். விசாரணையில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (28), திருப்போரூர் அடுத்த காயராம்பேடு பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (20) ஆகியோர் என்பதும், அரவிந்தன் பைக்ைக திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : persons ,college campus ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது