×

போரூர் அருகே காரம்பாக்கத்தில் கணவன் இறந்த சோகத்தில் கர்ப்பிணி திடீர் தற்கொலை

பல்லாவரம், மே 15: போரூர் காரம்பாக்கம் பொன்னி நகர், குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (27). இவரது மனைவி இளந்தென்றல் (25). தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அறைக்குள் சென்ற இளந்தென்றல் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மாமனார் ரவி கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவு திறக்காததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளந்தென்றல் தூக்கிட்டு சடலமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தகவலறிந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளந்தென்றல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கல்லூரியில் படிக்கும்போது பிரவீன் குமார் என்பவரை இளந்தென்றல் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி நடந்த சாலை விபத்தில் பிரவீன்குமார் இறந்துள்ளார்.   இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இளந்தென்றல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. கணவர் இறந்த துக்கம் தாளாமல் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : suicide ,Porur ,Karambakkam ,
× RELATED போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!