×

நாயை கொன்ற ஆசாமி கைது

சென்னை, ேம 15: சென்னை மூலக்கொத்தளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தெருவில் சுற்றித்திரிந்த நாயை மர்ம நபர் ஒருவர் கொடூரமாக அடித்து தரதரவென இழுத்துச்சென்று கூவம் ஆற்றில் மூழ்கடித்து கொன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ேவகமாக பரவியது. இதுகுறித்து ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த மகேஸ்வரன் வீடியோ ஆதாரத்துடன் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த குமார் (42) என்பவர், நாயை அடித்து கொன்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அவருடைய தந்தையை நாய் கடித்ததால் ஆத்திரத்தில் நாயை அடித்து கொன்றதாக கூறினார். இதையடுத்து, மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் குமாரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Assam ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...