×

ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதால் தனியார் தங்கும் விடுதியில் திடீர் தீ

சேலம், மே 15: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள தங்கும் விடுதியில், திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒரு விடுதியின் அறையில் இருந்துது, நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், விடுதி ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில், அந்த விடுதி அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : hotel ,Aceh ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...