×

துறையூர் அருகே கோட்டப்பாளையத்தில் மாரியம்மன் கோயில் பிரமோற்சவ தேர்திருவிழா

துறையூர், மே 15:  துறையூர் அருகே கோட்டப்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக உள்ள மாரியம்மன் மற்றும் மதுரைவீரன் சாமி கோயில் சித்திரை மாத பிரமோற்சவ தேர் திருவிழா நேற்று  நடைபெற்றது. கடந்த ஏப்.30ம் தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி அம்மனுக்கு மறுகாப்பு கட்டும் நிகழ்ச்சியும், 10ம் தேதி சக்திவேல், கரகம் ஆகியன எடுத்து திருவீதி உலா நடைபெற்றது. 11, 12 ஆகிய தேதிகளில் மின் விளக்குகள் அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா அன்னதானம் நடைபெற்றது. 13ம் தேதி காலையில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, வாண வேடிக்கை, செண்டை மேள வாத்திய கச்சேரி ஆகியவை நடைபெற்றது. நேற்று மாரியம்மனுக்குசிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இன்று (15ம் தேதி) அக்கினிச் சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகளும், 16ம் தேதி அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Tags : Mariamman Temple ,Kothapalayam ,Duraiyur ,
× RELATED சீர்காழி அருகே சட்டநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயிலில் காவடி திருவிழா