×

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: ராசிபுரம் நகராட்சி எச்சரிக்கை

ராசிபுரம், மே 15: ராசிபுரம் நகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ராசிபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி போன்றவற்றை பொதுமக்கள் குறித்த காலத்திற்குள் செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் பலமுறை ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகிறது. ஆனால், பலரும் இதுவரை வரியை செலுத்தாமல் உள்ளனர். எனவே குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்