×

ஓட்டலில் தகராறு; தொழிலாளி கழுத்து அறுப்பு

நாமக்கல், மே 15: நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் திருச்சி மாவட்டம் வீரமாச்சான்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (45). சப்ளையராக வேலை செய்து வந்தார். அந்த ஒட்டலில் நாமக்கல்லை சேர்ந்த ஞானசேகரன் புரோட்டோ மாஸ்டராக இருக்கிறார். நேற்றிரவு ஞானசேகரன், வெங்காயத்தை வெட்டும் படி கிருஷ்ணமூர்த்தியிடம் கூறினார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி வாழை இலையை வெட்ட வேண்டிய வேலை இருப்பதாக கூறியுள்ளார். இதில், அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதனால், ஆத்திரமடைந்த ஞானசேகரன், கத்தியால் கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்து விட்டு  தப்பி ஓடிவிட்டார். இதனால், ஓட்டலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை மீட்ட அங்கிருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய ஞானகேரனை தேடி வருகின்றனர்.

Tags : hotel ,
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!