×

காடையாம்பட்டி அருகே மோதல் ஆயுதங்களுடன் ஓடஓட துரத்தி தாக்கிய கும்பல் மீது வழக்கு

காடையாம்பட்டி, மே 15: காடையாம்பட்டி பகுதியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த கும்பல் பைக் மீது மோதியதை தட்டிக்கேட்ட நபரை தாக்கியும், தடுக்க முயன்ற பொதுமக்களை அரிவாள், உருட்டுக்கட்டையுடன் தாக்கிய வழக்கில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காடையாம்பட்டி அருகே, டேனிஷ்பேட்டை பகுதியில் நேற்று முன் தினம் 4 பேர் மது குடித்து விட்டு காரை ஓட்டி வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காடையாம்பட்டியை சேர்ந்த மனிரத்னம் என்பவர் பைக்கில் வந்தார். அப்போது, அவர்கள் மீது போதை ஆசாமிகள் காரை மோதியுள்ளனர். இதில் பைக்கிள் வந்த இருவரும் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

அப்போது காரி் வந்தவர்களை பார்த்து தட்டி கேட்டார். இதில், போதை ஆசாமிகள் வாலிபரை தாக்கினர்.  இதை பார்த்த பொதுமக்கள் தட்டிகேட்டனர். அப்போது போதை ஆசாமிகள் காரில் தப்ப முயன்றனர். அப்போது சிலர் காரை நோக்கி கல்லை எடுத்து வீசினர். இதில் காரின் கண்ணாடி உடைந்து நெருங்கியது. இதையடுத்து மீண்டும் தாறு மாறாக காரை ஓட்டிய போதை ஆசாமிகள், சாலையோர பள்ளத்தில் இறக்கியதால் காரை எடுக்க முடியவில்லை.

இதையடுத்து காரில் இருந்து இறங்கிய 4 பேரும் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை ஆகியவற்றை எடுததுக்கொண்டு பொதுமக்களை விரட்டத் தொடங்கினர். இதில் பயந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் (24) என்பவர் காயமடைந்தார். பின்னர் அந்த கும்பல் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அதில் இருந்த கத்தி மற்றும் அரிவாள் உருட்டுக்கட்டைகளை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஓமலுர் டிஎஸ்பி சரவணன் விசாரணை நடத்தினார். அதில் காரில் ஆயுதங்களுடன் வந்த காடையாம்பட்டி அம்பேத்கர் பகுதியை சேர்ந்த பத்ரிகேசவன் மகன் சாமுவேல் (24), சுரேஷ்பாபு, வெங்கடேசன், சாமுவேலின் நண்பர்கள் 2பேர் என மொத்தம் 5 பேர் மீதும், காரை உடைத்தவரின் தரப்பில் நாராயணன் மகன் மணிரத்தினம், (24), ராஜேந்திரன், மணி, சின்னத்தம்பி, கல்யாணம், சக்திவேல் என 6 பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான 11 பேரை தீவட்டிப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags : Kodiyambadi ,
× RELATED காடையாம்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது