×

காமராஜர் கல்வி நிறுவனம் சார்பில் வாள்சண்டை பயிற்சி முகாம்

சேந்தமங்கலம், மே 15: நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனம் சார்பில் கோடைகால வாள்சண்டை பயிற்சி முகாம் நடந்தது. இதில், சென்னை, கன்னியாகுமாரி, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் 28 பேரும், மாணவிகள் 30 பேரும் கலந்து கொண்டனர். கல்வி நிறுவன தலைவர் நல்லதம்பி முகாமை தொடங்கி வைத்தார். இதில் செயலாளர் சதாசிவம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன், கல்வி நகர ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வாள்சண்டை பயிற்சியாளர் பிரபு குமார் 20 நாட்களாக மாணவ, மாணவிகளை கொல்லிமலை, காரவள்ளி, நைனாமலை, நாமக்கல் மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள் யுவராஜ், சரவணன், கமலஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : Kamaraj Educational Institute ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்