×

குப்பைகளை அகற்றாததால் குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேடு

ஓசூர், மே 15: ஓசூர் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை அகற்றாததால் சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியாக உள்ளது. இதில் 45 வார்டுகளை  கொண்டுள்ளது. இந்நிலையில், ஓசூர் -ராயகோட்டை சாலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில்,கடந்த சில நாட்களாக கொட்டப்பட்ட குப்பை எடுக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும், குடியிருப்பு பகுதி மட்டுமின்றி அனைத்து பகுதிகளில் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே  அரசு அலுவலர் குடியிருப்பு மற்றும் அனைத்து பகுதியில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...