×

இண்டூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொல்ல முயற்சி

தர்மபுரி, மே 15: இண்டூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கழுத்து நெரித்து கொல்ல முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் இண்டூர் தலவாய்அள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (42). இவரது மனைவி வள்ளி (37). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதன்பின்னர் வள்ளி தூங்க சென்றார். திடீரென வள்ளியின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, வள்ளி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தினர். வள்ளியின் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், வள்ளி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அதேவேளையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திக், வள்ளியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : family dispute ,Indore ,
× RELATED சூதாடிய 11 பேர் கைது 6 டூவீலர்கள் பறிமுதல்