×

காரிமங்கலம் பகுதியில் எரியாத மின் விளக்குகள்

காரிமங்கலம், மே 15: காரிமங்கலம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியாததால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை, தெரு விளக்கு, சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கும் பெருபாலும் எரியாததால், இரவு ேநரங்களில் இருள் சூழ்ந்த பகுதியாக பல இடங்கள் உள்ளது.

இதில், ராமசாமி கோயில், சவுடப்பசெட்டி தெரு, மொரப்பூர் ரோடு, கடைவீதி, பேருந்து நிலையம், பாலக்கோடு ரோடு, கடைவீதி, மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை, வெள்ளையன்கொட்டாவூர், சின்னமிட்டஅள்ளி, பெரிய மிட்ட அள்ளி, காட்டுசீகலஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மின் விளக்குகள் எரியாததால், இரவு ேநரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க ேபரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Gulf ,Gharmangalam ,
× RELATED தமிழகத்தில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்!