×

சுக்காலியூர் அருகே சேதமான மேம்பால நடைபாதையால் பாதசாரிகள் கடும்அவதி

கரூர், மே15: கரூர் சுக்காலியூர் அருகேயுள்ள மேம்பால நடைபாதையை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மதுரை பைபாஸ் சாலையில் சுக்காலியூர் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மேம்பாலத்தின் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதையின் சிலாப்புகள் ஆங்காங்கே சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்த நடைபாதையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : pedestrians ,Sukaliyur ,
× RELATED திருவள்ளூர் ஜெ.என்.சாலை நடைபாதை...