×

நாகை அருகே ஆற்று மணல் கடத்தி வந்த லோடு ஆட்டோ பறிமுதல்

நாகை, மே 15: நாகை அருகே ஆற்று மணல் கடத்தி வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில் திட்டச்சேரி போலீசார் விச்சூர் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தேவாதிநல்லூர் அரசலாற்றில் இருந்து ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து  மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் லோடு ஆட்டோ டிரைவரான வோதிநல்லூரை சேர்ந்த  கார்த்தி (25) என்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு