×

கோடை விடுமுறையால் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தரங்கம்பாடி, மே 15:  தரங்கம்பாடி கடற்கரையில் கோடை விடுமுறை என்பதாலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் மாலை நேரங்களில் தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.  நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை நீண்ட அழகிய கடற்கரை ஆகும். இங்கு இயற்கை மருத்துவ குணம் கொண்ட ஓசோன் காற்று ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிகம் வீசுகிறது. மேலும் கடற்கரையில் டேனீஷ் நேவி கேப்டன் ரோலண்டு கிராப் கி.பி.1620-ல் தரங்கம்பாடி கடற்கரையில் கட்டியுள்ள டேனீஷ் கோட்டையையும், கோட்டையின் உள்ளே உள்ள அருங்காட்சியகமும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உள்ளது. அதனால் தரங்கம்பாடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இப்பொழுது கோடை விடுமுறை என்பதாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் மாலை நேரத்தில் கடற்கரையில் குவிந்து விடுகின்றனர். இரவு 8 மணி வரை கடற்கரையில் இருந்து காற்று வாங்கி செல்வது பகலில் உள்ள வெப்பத்திலிருந்து மீண்ட திருப்தியுடன் வீடு திரும்புகின்றனர்.

Tags : beach ,summer vacation ,Tangangambadi ,
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...