×

மணவாளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நகை பறிப்பு

குளச்சல், மே 14: மணவாளக்குறிச்சி அருகே மணவிளையை சேர்ந்தவர் தாமஸ் கென்னடி. இவரது மனைவி தென்சிலி வினிதா (45). இவரது தங்கை கில்டா கேத்தரின். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிச்சந்தை அருகே உள்ள தளவாய்புரத்தில் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சில நேரங்களில் அங்கிருந்து தனது சகோதரி வீட்டுக்கு வந்துசெல்வார்.

வழக்கம்போல் கடந்த 3ம் தேதி மணவிளைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவர் கண்ணமங்கலகுளம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர் அவரை பைக்கில் ஏற கூறியுள்ளார். இவரும் பைக்கில் ஏறியுள்ளார். உரப்பனவிளை பாலம் அருகே சென்றதும் கில்டாவை பைக்கில் இருந்து இறக்கி விட்டுவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகைைய பறித்துவிட்டு சென்று விட்டார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : Manavalakurichi ,
× RELATED குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு...