×

பண்ருட்டி அருகே காலாவதி குளிர்பானங்களை சாலையில் வீசிய அவலம்

பண்ருட்டி, மே 14: பண்ருட்டி- சென்னை சாலையில் பணிக்கன்குப்பம் பகுதியில் சாலை ஓரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காலாவதியான குளிர்பானங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர். இப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் சூழ்நிலையில் காலாவதியானது என அறியாமல் சிறுவர்கள் அதை எடுத்து குடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பண்ருட்டி நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடம் சென்று சாலையோரத்தில் கிடந்த குளிர்பானங்களை எடுத்து வந்து கெடிலம் ஆற்றில் கொட்டி அழித்தனர். பண்ருட்டி நகரத்தில் குளிர்பானம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் காலாவதியானவற்றை உடனே கொட்டி அழித்திட வேண்டும். இதுபோல் சாலையில் வீசிவிட்டு செல்லக்கூடாது. அப்படி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags : road ,Panrutti ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...