×

நாகர்கோவிலில் காதலனுடன் சுற்றி திரிந்த மாணவிக்கு நடுரோட்டில் சரமாரி அடி உதை பெற்றோர், உறவினர்கள் ஆத்திரம்

நாகர்கோவில், மே 14:   தக்கலை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், குடும்பத்துடன் ராஜாவூர் ஆலயத்துக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த பணகுடியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு ஒரே நாளில் காதலாக மாறியது. தனது தந்தை சேமித்து வைத்திருந்த பணத்தை திருடி யாருக்கும் தெரியாமல் செல்போன் வாங்கி ரகசியமாக காதலனுடன் மாணவி பேசி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை உறவினர் ஒருவரின் விஷேச நிகழ்ச்சிக்காக மாணவி குடும்பத்துடன் நாகர்கோவில் புறப்பட்டார். அப்போது மாணவியின் தந்தை, பைக்கில் மூவரும் செல்ல முடியாது. நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தம் அருகே இறங்கி நில். நாங்கள் பைக்கில் வந்து விடுகிறோம் என கூறி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்சில் வரும்போதே தனது காதலனுக்கு தகவல் கொடுத்து விட்டார். எனவே கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் இறங்காமல் நேராக வடசேரி வந்துள்ளார். பின்னர் காதலனுடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

இதற்கிடையே  நாகர்கோவில் வந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் மாணவியை காணாமல் பல இடங்களில் தேடி அலைந்தனர். காலை முதல் இரவு வரை தேடி வந்த நிலையில் இரவு 7 மணிக்கு அண்ணா ஸ்டேடியம் அருகே காதலனுடன், மாணவி  நிற்பதை அறிந்து அங்கு சென்றனர். பின்னர் ஆத்திரத்தில் மாணவியை சரமாரியாக அடித்தனர். தகவல் அறிந்ததும் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மாணவியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மாணவிக்கு அறிவுரை கூறினர். முதலில் காதலனுடன் தான் செல்வேன் என அடம் பிடித்தார். பின்னர் அவரை சமாதானம் செய்து, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags : Parents ,nurse ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...