×

மும்பை வியாபாரியிடம் 23 சவரன் கொள்ளை

அண்ணாநகர், மே 14: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் தாராசந்த் (55). நகை வியாபாரி. இவரது அலுவலகம் திருச்சியில் அமைந்துள்ளது. இவர், ஆர்டரின் பேரில் கடைகளுக்கு விற்பனை செய்வது வழக்கம். அதன்படி, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றுக்கு செய்த, 23 சவரன் நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திருச்சியில் இருந்து அரசு பேருந்து மூலம் கோயம்பேடு வந்து இறங்கினார். அங்கு, அவர் தனது கைப்பையை சோதனை செய்தபோது, பையை கிழித்து அதில் வைத்திருந்த 23 தங்க வளையல்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Tags : businessman ,Mumbai ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...