×

தெரு நாய் கடித்து தபால்காரர் காயம்

துரைப்பாக்கம், மே 14: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (40). துரைப்பாக்கம் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று வழக்கம் போல், துரைப்பாக்கம் பகுதிகளில் சைக்கிளில் சென்று, தபால்களை உரியவர்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

துரைப்பாக்கம் பாண்டியன் நகர் அருகே சென்றபோது, தெரு நாய் ஒன்று திடீரென ஸ்ரீராமை துரத்தி துரத்தி கடித்தது. இதில் நிலை தடுமாறிய ஸ்ரீராம், சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். பின்னர் நாயிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும், ஸ்ரீராமை நாய் விரட்டி விரட்டி கடித்தது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : postman ,
× RELATED ஆகஸ்ட் 25ல் திரைக்கு வருகிறது ஹர்காரா