குளத்தூர்,மே 14: குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையோர கிராமமான சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள தெருவீதிகளில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் கடந்த பலவருடங்களாக காங்கிரீட் பெயர்ந்து துருப்பிடித்த கம்பியின் நுனியில் எப்போது கீழே விழுமோ என அப்பகுதியினரை அச்சுறுத்தி வருகிறது. சுப்பிரமணியபுரம் தெற்கு தெரு, கிழக்கு தெரு, மேற்குபகுதி என 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் இது போல ஆபத்தான நிலையில்தான் உள்ளன. சிதிலமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் பல முறை தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக தெரியவில்லை. எனவே மின்கம்பங்களை உடனடியாக மாற்றியமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.