×

தூத்துக்குடியில் பைக், சிசிடிவி கேமரா சூறை

தூத்துக்குடி,மே 14: தூத்துக்குடியில் பைக், சிசிடிவி கேமராக்களை சூறையாடியதாக 4 பேரை பிடித்து வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் பாபு (47). கூலி தொழிலாளி. இவர் இருந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துகனி என்பவர் வசித்து வந்த நிலையில்  தற்போது அவர் வீட்டை காலி செய்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நேற்று முன்தினம் பாபு வீட்டுக்குள் நுழைந்துள்ளது.

அவர்கள் முத்துகனி எங்கே என்று கேட்டு பாபுவிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவரது வீட்டின் முன்பு இருந்த பைக்கை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த கும்பல் அதே தெருவில் உள்ள சந்துரு என்பவருக்கு சொந்தமான கிணற்று உறை மற்றும் சிமெண்ட் பொருட்கள் தயாரிக்கும் கடைக்குள் புகுந்து, அங்கு இருந்த கண்காணிப்பு கேமிரா, மின்விளக்கு, மரக்கதவு ஆகியவற்றை சேதப்படுத்தியது. இதுகுறித்து பாபு, சந்துரு ஆகியோர் தனித்தனியே சிப்காட் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...