×

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: மே 30ல் தொடக்கம்

சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப படிவம் 17ம்தேதி வரை வழங்கப்படுகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 30,31ம்தேதி 2நாள்கள் நடக்கிறது என கல்லூரி  முதல்வர் (பொறுப்பு) தீபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது. சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் (மகளிர்) கல்லூரியில் 2019-20ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவம் மே 17ம்தேதி  மாலை 3மணி வரை  விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்று மாலை 5மணி வரை பெறப்படும்.

இக்கல்வியாண்டிற்கான சேர்க்கை கலந்தாய்வு மே 30ம் தேதி காலை 10மணிக்கு  இளங்கலை அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான சிறப்பு ஓதுக்கீடும் ( முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், என்சிசி மற்றும் விளையாட்டு பிரிவினர்), பிற்பகல் 2மணி முதல் இளங்கலை கணிதம்,மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மே 31ம்தேதி காலை 10 மணிக்கு வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும் மதியம் 2மணி முதல் தமிழ் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தீபா தெரிவித்துள்ளார். 

Tags : Sathankulam College ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு