×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கிராமம் கிராமமாக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி  ஆகியோர் கிராமம், கிராமாக சென்று அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மோகனுக்கு ஆதரவாக கவர்னகிரி, சுந்தரலிங்கம் காலனி, முப்பிலிப்பட்டி, புதுப்பச்சேரி, செவல்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ,  ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டு சேகரித்தனர்.

பிரசாரத்தின்போது அனைத்து கிராமங்களுக்கும் சாலை, குடிநீர், சமுதாய நலக்கூடங்கள் வசதி செய்து கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும் இந்த தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகிறார் என்றனர்.

கிராம மக்களின் கோரிக்கை மனுக்களையும் அமைச்சர்கள் பெற்றனர். பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜவர்மன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர், வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், ஓட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : village ,ministers ,Ottapidaram ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...