×

சாத்தான்குளம் அருகே தொழிலதிபரிடம் ரூ. 1 லட்சம் பறிப்பு: 6 பேர் கும்பலுக்கு வலை

உடன்குடி, மே14: சாத்தான்குளம் அருகே துக்கவீட்டுக்கு வந்த சென்னை தொழிலதிபரை தாக்கி ரூ.1 லட்சம் பறித்து சென்றதாக முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 6பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே அறிவான்மொழியை சேர்ந்தவர் அந்தோணிபிச்சை மகன் வேல்துரை(47). இவர் சென்னையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே ஊரைசேர்ந்த பட்டு என்பவரது மகன் ராஜலிங்கம் என்பவர் பணியாற்றி வந்தார். பணம் கையாடல் புகாரை தொடர்ந்து ராஜலிங்கம் பணியில்  இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் வேல்துரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது ஏற்கனவே நடந்து வரும் வீடு கட்டுமான பணிக்கு தேவையான பொருட்கள் வாங்கிய வகைக்கு மெஞ்ஞானபுரத்தில் உள்ள ஹார்டுவேர் கம்பெனியிடம் வழங்குவதற்காக ரூ.1லட்சம் எடுத்துக்கொண்டு பைக்கில் புறப்பட்டுச் சென்றார். அச்சம்பாடு பகுதியில் பைக்கில்   வரும் போது ராஜலிங்கம் உள்ளிட்ட 6பேர் கும்பல், வழிமறித்து வேல்துரையை தாக்கினர். பின்னர் அவரிடமிருந்து ரூ.1லட்சத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து வேல்துரை, மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறப்படும் ராஜலிங்கம், அவரது உறவினர்கள் முத்துலிங்கம், முத்துக்குமார், சரவணகுமார், சித்திரைசெல்வம் மற்றொரு ராஜலிங்கம் ஆகிய 6பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர்...