×

ஆய்க்குடி அமர்சேவா சங்க பணியாளர் ஆண்டு விழா

தென்காசி, மே 14:  ஆய்க்குடியில் அமர்சேவா சங்க பணியாளர்கள் சார்பில் ஆண்டு விழா நடந்தது. லால்குடி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மணிமேகலை இறைவணக்கம் பாடினார். கணக்கு பிரிவு தீபா வரவேற்றார். தலைமையாசிரியை மீனாட்சி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
பாங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் அன்பழகன், பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த மேலாளர் சுபலட்சுமி, பாங்க் ஆப் இந்தியா மேலாளர் சபி வாழ்த்திப் பேசினர். சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன், பொருளாளர் பட்டம்மாள், செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், மேலாளர் கிருஷ்ணபிள்ளை, சென்னை சவுமியா உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணக்கு பிரிவு பொறுப்பாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : Festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!