×

சிவகிரியில் இறந்த வக்கீல்கள் குடும்பத்துக்கு சேமநலநிதி ரூ.1 லட்சம்

சிவகிரி, மே 14: சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றத்தில் வக்கீல் சங்க உறுப்பினராக இருந்து பணியாற்றிய வக்கீல்கள் ஜோதிமணி, சிவக்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தனர். இதையடுத்து இருவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சேமநல நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்நிதிக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி, சிவகிரி நீதிமன்றத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் நடந்தது. சிவகிரி வக்கீல்கள் சங்கத் தலைவர் பரமசிவன், இறந்த வக்கீல்ஜோதிமணியின் மனைவி ஜெயந்தி, சிவக்குமாரின் மனைவி வசந்தி ஆகியோரிடம் காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் பொன்முத்து வேல்சாமி, பொருளாளர் மாரிமுத்து, மூத்த வக்கீல் சங்கை கணேசன், துணைத் தலைவர் சின்னத்தம்பி, துணைச் செயலாளர் ராஜேந்திர பூபதி மற்றும் வக்கீல் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : lawyer ,Sivagiri ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்