×

வீட்டை உடைத்து 4 பவுன் திருட்டு

நெல்லை, மே 14: சேர்ந்தமரம் அருகே வீட்டை உடைத்து 4 பவுன் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேர்ந்தமரம்  அடுத்த ஆனைகுளம்- அய்யாபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன்  பாலகிருஷ்ணன் (36). விவசாயியான இவர் கடந்த 11ம் தேதி  வீட்டைப்  பூட்டிவிட்டு சொந்த விஷயமாக மனைவியுடன் வெளியூர் சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகைகள் மர்ம நபர்களால் திருடு போனது  தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் சப்இன்ஸ்பெக்டர் உத்திரகுமார் வழக்குப் பதிந்து, நகை திருடிச் சென்றவர்களை தேடி வருகிறார்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...