×

கோஷ்டி மோதலில் ஓட்டலுக்கு தீ வைப்பு

நெல்லை, மே 14:  நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). நாங்குநேரி அண்ணாசாலை பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் செல்லத்துரை, சிவா. இவர்களில் செல்லத்துரைக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆறுமுகம் மகன் சிவாவும், எதிர்தரப்பை சேர்ந்த மகேந்திரனும் (25)  காயமடைந்ததால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து நாங்குநேரியில் உள்ள ஆறுமுகத்திற்கு சொந்தமான ஓட்டலுக்கு மர்ம கும்பல் தீ வைத்து சென்றது. இதில் ஓட்டல் முன்பாக இருந்த மேஜை, பெஞ்ச் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து நாசமாகின. இருப்பினும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இதனிடையே இருதரப்பினரும் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தனர். ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் இசக்கி, அருணாசலம் மகன் நம்பி, உடையார் மகன் மீனாட்சிசுந்தரம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதே போல் மகேந்திரன் அளித்த புகாரின்பேரில் ஆறுமுகம் மகன்கள் செல்லத்துரை, சிவா மற்றும் உறவினர்கள் கண்ணன், முத்து ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்தனர். எஸ்ஐ ராமகிருஷ்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : host clash ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி