×

கள்ளிமந்தையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நெகிழ்ச்சி

ஒட்டன்சத்திரம், மே 14: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1997ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல் தலைமை காவலர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். முன்னதாக காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரெங்கசாமி, விளையாட்டுத்துறை ஆசிரியர் சவடமுத்து, ஆசிரியர் அர்ஜூன் பெரியசாமி, ஆசிரியர் கந்தசாமி, ஆசிரியை மாரியம்மா, சுரேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமலைசாமி ஆகியோர் கலந்துகொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டு நெகிழ்ச்சி அடைந்தனர்.

இதில் பள்ளி முன்னாள் மாணவ, மாணவிகள் கருப்புச்சாமி, கோவிந்தராஜ், பன்னீர்செல்வம், சரவணன், துரைச்சாமி, கூட்டுறவு வங்கி தலைவர் முத்துச்சாமி, ராஜசாந்தி, மகேஸ்வரி, சுசி, அபிராமி உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முடிவில் வேலுச்சாமி நன்றி கூறினார்.

Tags : alumni ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...