×

கடையில் வீட்டு சிலிண்டரா?

பழநி, மே 14: கோடை விடுமுறையால் பழநி கோயிலுக்கு தற்போது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்களுக்காக அடிவார பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக உணவுக்கடைகளில் வணிக சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆய்வு விரைவில் நடத்தப்படவுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன என பழநி சப்கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்