×

அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் தொல்லையை தடுக்க வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

திண்டுக்கல், மே 14: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய செயற்குழு கூட்டம் திண்டுக்கல் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். தலைவர் சுப்ரமணியம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திண்டுக்கல் நகரை சுற்றி பேரூந்து வசதி ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் புரோக்கர் தொல்லை அதிகமாக உள்ளது. அரசு அலுவலர்கள் போல் செயல்படுகின்றனர். அதனை தடுக்க வேண்டும். மதுபான கடைகளுக்கு முன்பும், அருகில் இருக்கும் தெருக்களிலும் திறந்தவெளி பாராக செயல்படுகிறது. அதனை தடுத்து அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ராஜேஸ்கண்ணன் நன்றி கூறினார்.

Tags : Consumer Protection Center ,government offices ,borrowers ,
× RELATED மகளிர் குழுக்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு